திருநெல்வேலியில் திருநங்கைகளுக்கு இலவச கால்நடை வளர்ப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வட்டார பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு நபார்டு வங்கி உதவியுடன் கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், நிதி சார் கல்வி ஆலோசகர் மகாலிங்கம், இந்தியன் வங்கி மேலாளர் ஜான் ஜோசப், நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, நபார்டு வங்கி மேலாளர் சசிகுமார் பேசுகையில், “திருநங்கைகளுக்கான கால்நடை வளர்ப்பு பயிற்சியானது 15 நாள் பயிற்சியாகும். இந்த 15 நாட்களும் திருநங்கைகள் விடுமுறையின்றி தொடர்ந்து பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இந்தியன் வங்கியில் கடன் உதவி பெற்று, கால்நடை வளர்ப்பு தொழில் செய்து திருநங்கைகள் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
இதையும் படிங்க : சதுரகிரி மலையேற ரெடியா? வந்துவிட்டது வனத்துறை அறிவிப்பு
இதன் மூலம் எப்படி வருமானம் ஈட்ட வேண்டும் உள்ளிட்டவை தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். இந்த பயிற்சியில் சேர்வதற்கான தகுதிகளாக, திருநங்கைகள் குறைந்தது 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் அவர்கள், திருநங்கைகள் என்று அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழை வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli