திருநெல்வேலி புத்தக திருவிழாவில் சட்ட உதவிகளை பற்றி அறிந்துகொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்ட உதவி முகாமானது நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கவும், பொதுமக்களுக்கிடையேயான பிரச்சனைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுகிறது. ஏழைகளாக இருந்தாலும் அவர்தம் குறைகளுக்கு நிவாரணம் காண நீதி மன்றங்களுக்கு செல்ல அவர்களுக்கு உதவி புரியவே தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட மற்றும் வட்டக்குழுக்கள் துணையுடன் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் வழக்காளர்கள், மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரசம் மற்றும் சுமுக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் வழக்குகளை சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்ளலாம். இதனை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் திருநெல்வேலி புத்தக திருவிழாவில் மாவட்ட நீதிமன்றம் சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பார்வையிட வந்த சட்ட கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி நந்தினி கூறுகையில், “தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் குடும்ப பிரச்சனை, நிலப்பிரச்சனை உள்ளிட்ட சிவில் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்க வேண்டும். நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து கார்ப்பரேஷன் உள்ளிட்டவை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனு அளிக்க வேண்டும். மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள வழக்குகளை நீதிபதிகளின் பரிந்துரையின்பேரில் உடனடியாக தீர்வு காணப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இவை அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகிறது. இங்கு கைதேர்ந்த வழக்கறிஞர்கள் உள்ளனர். குறைத்த நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காணப்படும். மக்கள் அச்சமின்றி தாராளமாக இங்கு வந்து இலவசமாக பயன் பெறலாம்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli