வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய தேவையை பூர்த்தி செய்வதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தனியார் ஆலை கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படுவதால், தாமிரபரணி ஆறு சென்னை கூவம் ஆறு போல மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் காங்கிரசார் கழிவுநீர் கால்வாய் மேல் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த உறுதிமொழி அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதனை அடுத்து காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த அதிகாரம் உள்ள அதிகாரி நேரில் வந்து கலப்பதை தடுத்து நிறுத்தப்படும் என உறுதிமொழி அளித்தால் போராட்டத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளரின் நேர்முக உதவியாளர் கழிவுநீர் கலப்பது தடுத்து நிறுத்தப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.
செய்தியாளர் : ஐயப்பன் (திருநெல்வேலி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirunelveli