முகப்பு /திருநெல்வேலி /

சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன- கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்

சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன- கருத்தரங்கில் பேராசிரியர் விளக்கம்

X
சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

Tirunelveli | திருநெல்வேலியில் சிறுதானிய பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சிறுதானியம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உதவி ஆட்சியர் கோகுல், அறக்கட்டளை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி சார்பில் மாணவ, மாணவிகள் சிறுதானியங்கள் குறித்து தெரிந்து கொள்ள அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து பேசிய பேராசிரியர்கள், ‘குதிரைவாலி, கேழ்வரகு, திணை வரகு ஆகிய சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பற்றி இன்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும், பலருக்கும் இப்போதும்கூட சிறுதானியங்கள் குறித்த முழுமையான விவரங்களும், அவை தரும் நன்மைகளும் தெரியவில்லை.

சிறுதானிய கருத்தரங்கு

நம் முன்னோர்களால் அந்த காலத்தில் இருந்தே சாப்பிடப்பட்டு வந்த ஆரோக்கியமான உணவுகளில் முதல் இடத்தை பிடிப்பது சிறுதானியங்கள் தான். ஆதிகாலத்தில் தொடங்கி இன்று நாம் வாழும் நவீன காலம் வரை மனித இனம் பயன்படுத்தும் உணவு வகைகளில் சிறுதானியங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் அரிசி சிறுதானியங்களின் வழிமரபு தான். சிறுதானியங்கள் மிதமான தட்ப வெப்ப நிலையிலும், குறைவான நீர் வசதியிலும் மற்றும் சாதாரண மண் வளத்திலும் நன்கு செழித்து வளரும். சிறுதானியங்களை நாம் உணவாக எடுத்துகொள்ளும் போது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

நெல்லையிலும் கலைஞர் நூலகம்? - சபாநாயகர் அப்பாவு சொன்ன சேதி

சிறுதானியங்களில் அதிக அளவு உள்ள இரும்புச்சத்து இரத்தசோகையைக் குணப்படுத்தும். சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் வளரும் அபாயத்தைக் குறைக்கிறது. சிறுதானியங்கள் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையைக் குறைத்து சரியான எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது என தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Tirunelveli