முகப்பு /திருநெல்வேலி /

எல்லா கைவினை பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கனுமா? அப்ப திருநெல்வேலியில் இந்த இடத்துக்கு போங்க..!

எல்லா கைவினை பொருட்களும் ஒரே இடத்தில் வாங்கனுமா? அப்ப திருநெல்வேலியில் இந்த இடத்துக்கு போங்க..!

X
திருநெல்வேலி

திருநெல்வேலி

Handicrafts | திருநெல்வேலியில் எல்லா கைவினைப் பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க கண்டிப்பா இங்க போங்க.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லையப்பர் கோயில், இருட்டுக்கடை அல்வா போன்ற சிறப்புகளை கொண்ட திருநெல்வேலி மாவட்டத்தில் கைவினைத் தொழிலும் பிரதானமாகும். ராதாபுரத்தில் பனை ஓலை பொருட்கள், அம்பாசமுத்திரத்தில் குத்துவிளக்கு, காரகுறிச்சி மண்பாண்ட பொருட்கள், கல்லிடைக்குறிச்சி அப்பளம், வீரவநல்லூர் கைத்தறி சேலைகள் என பல்வேறு கைவினை பொருட்கள் நெல்லையில் உற்பத்தி ஆகின்றன. டிஜிட்டல் யுகத்தில் புதுப்புது இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கூட மேற்கண்ட பொருட்களை கைவினைத் தொழிலாளர்கள் பாரம்பரிய முறைப்படி தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கைவினைப் பொருட்களை ஒரே இடத்தில் வைத்து விற்பதன் மூலம் பொதுமக்களும், கைவினை தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்ற நோக்கத்தோடு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகளிர் திட்ட வளாகத்தில், நெல்லை கிராப்ட்ஸ் என்ற விற்பனைக்கூடம் அமைத்துள்ளது. இங்கு மாவட்டம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் 12 வகையான கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராதாபுரம் பகுதியில் செய்யப்படும் பனைஓலை பொருட்களான திருமண பெட்டி, பழக்கூடை, காய்கறிக் கூடை, இடியாப்ப தட்டு, மிட்டாய் தட்டு, விசிறி மற்றும் காரைக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களான மண் ஜாடிகள், மண் தோசைக்கல், தயிர் ஜாடி, அகல்விளக்கு, குழம்பு சட்டி, கற்றாழை நாரால் செய்யப்படும் பந்து வடிவலான மின்விளக்கு விசிறி, பூக்கூடை, அழுக்கு கூடை, மேலும் பத்தமடை பாய்கள், மரத்தினால் செய்யப்பட்ட அழகு சாதன பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் என பலவகையான கைவினை பொருட்கள் விதவிதமான வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாக்க நாமும் கைவினைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாமே.

செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli