முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலியில் ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா?

திருநெல்வேலியில் ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. எதற்கு தெரியுமா?

திருநெல்வேலி

திருநெல்வேலி

Tirunelveli District | நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

பங்குனி உத்திரத்தை ஒட்டி நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பங்குனி உத்திரத் திருவிழா வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி கொண்டாடப்பட உள்ளது இதையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொது தேர்வுகள் மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஐந்தாம் தேதி அரசு பொது தேர்வு இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பள்ளிகள் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளில், அரசு பொது தேர்வுகள் அனைத்தும் எந்தவித மாறுதல் இன்றி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. இது தவிர மாவட்ட கருவூலம் அனைத்து சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே மாதம் 6ஆம்தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது கோடை விடுமுறையில் உள்ள கல்வி நிறுவன மாணவ மாணவிகளுக்கு இந்த வேலை நாள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Holiday, Local News, Tirunelveli