கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டதால் வேலை வாய்ப்பு பெறுவது இளைஞர்களுக்கு சவாலாக உள்ளது. தனியார் நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கினாலும் கூட பணி பாதுகாப்பு இல்லாததால் இளைஞர்கள் அரசு வேலையை பெற முயற்சிக்கின்றனர்.
இதனால் பயிற்சி அகாடமிகளும் அதிகமாகி விட்டன. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று பணம் கட்டி படிக்க முடியாத இளைஞர்கள் பார்க் போன்ற இடங்களில் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்விற்கு படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தேர்வர்களை பார்த்துள்ளனர். பின்பு காரில் இருந்து இறங்கிய இருவரும் தேர்வர்களிடம் பேசினர்.
அப்போது தேர்வர்கள் தங்களின் நிலைமையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் விளக்கிக் கூறினார். உடனே தேவர்கள் படிப்பதற்கு வசதியான இடத்தை ஏற்படுத்தி தருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தனர்.
அதன்படி விரைவிலேயே பாலை பேருந்து நிலையம் மேல் தளத்தில் குளிரூட்டப்பட்ட நூலகத்துடன் படிப்பு கூடம் அமைத்துக் கொடுத்தனர். இங்கு ஒரு நாளைக்கு 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை எளிதாக கொடுக்க முடிவதாக தேவர்கள் தெரிவித்தனர்.
நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா - பிப்ரவரி 4ம் தேதி தீர்த்தவாரி
செய்தியாளர்: சந்தானம், திருநெல்வேலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli