முகப்பு /செய்தி /திருநெல்வேலி / காருக்குள் மர்மமான முறையில் சிறுமி பலி - நெல்லையில் சோகம்

காருக்குள் மர்மமான முறையில் சிறுமி பலி - நெல்லையில் சோகம்

நெல்லை

நெல்லை

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

  • Last Updated :
  • Tirunelveli, India

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே சிறுமி காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகேயுள்ள பள்ளாக்கால் புதுக்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகா (வயது 29). இவரது கணவர் முக்கூடலை சேர்ந்த மாரியப்பன். குடும்ப தகராறு காரணமாக கனகா அவரது கணவரைப் பிரிந்து மகள் சரண்யாவுடன் (வயது 7) வாழ்ந்து வருகிறார்.

சரண்யா அப்பகுதியில் அரசுப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். மேலும் கனகா அப்பகுதியிலுள்ள தனியார் பீடிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி சரண்யா அப்பகுதியிலுள்ள பழனிக்குமார் என்பவரின் காரின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வழக்கம்போல் வேலைக்கு சென்று வீடு திரும்பிய கனகா சிறுமியை அக்கம்பக்த்தில் தேடியுள்ளார். அப்போது நீண்ட நேர தேடுதலுக்கு பின் சிறுமி சரண்யா காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதையும் வாசிக்க: நடு சாலையில் பெண் மீது தாக்குதல் - திடுக்கிடும் வீடியோ காட்சிகள்

தொடர்ந்து சிறுமியை மீட்டு அம்பை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்தது விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி காருக்குள் மூச்சு திணறி இறந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர்: ஐயப்பன் ( திருநெல்வேலி)

    First published:

    Tags: Crime News, Tirunelveli