முகப்பு /செய்தி /தூத்துக்குடி / கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி கோவில் திருவிழா.. தடைகளுக்கு பின் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்..

வீரசக்க தேவி கோவில் திருவிழா

வீரசக்க தேவி கோவில் திருவிழா

Veerapandiya Kattabomman family deity Veerasakka Devi : தூத்துக்குடி - திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 67-வது ஆண்டு விழாவினையொட்டி கட்டபொம்மன் தொடர் ஜோதி ஓட்டம் துவங்கியது.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்க தேவி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.  இந்த திருவிழாவிற்கு தூத்துக்குடி, திருச்செந்தூர், கடம்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஜோதி எடுத்து வருவது வழக்கம்.

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திர போராட்டத்திற்கு முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மற்றும்  வீரசக்க தேவி  உற்சவ ஆலய திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.  இவ்விழாவின் துவக்கமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக இருந்து வீரபாண்டிய கட்ட பொம்மனின் நினைவு ஜோதி நிகழ்ச்சி  நடைபெற்றது. இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்ச்சியாக கொண்டாடபட்டு வருகிறது.

பாஞ்சாலஞ்குறிச்சி நோக்கி ஜோதி ஓட்டம்

இதையொட்டி திருச்செந்தூர் முதல்  பாஞ்சாலங்குறிச்சி வரை தொடர் ஜோதி ஓட்டம் , புண்ணிய தீர்த்தம் கொண்டு செல்வது வழக்கம் இந்த தொடர் ஜோதி ஓட்டத்தை முன்னிட்டு இன்று  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பிருந்து தொடர் ஜோதி ஓட்டத்தையும் புண்ணிய தீர்த்தத்தை கொண்டு சென்றனர் .  இந்நிகழ்வை  வீரசக்க தேவி ஆலய குழுவினர்  சார்பில் தலைவர் முருக பூபதி மற்றும் திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர்  வசந்த்ராஜ் ஆகியோர் இந்த திருச்செந்தூரில் இருந்து பஞ்சாலங்குறிச்சி  வரை தொடர் ஜோதி  ஓட்டத்தினை     இன்று தொடங்கி வைத்தனர்.

ஜோதி ஓட்டம்

இதனை தொடர்ந்து இந்த ஜோதி  ஓட்டமானது              பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி சென்றது. இந்த கட்டபொம்மனின் நினைவு ஜோதி கொண்டு செல்லும் போது வீரசக்க தேவி குழுவினர் ஜோதிக்கு  முன்பாக  மேள தாளங்கள் முழங்கப்பட்டு ஆரவாரத்துடன் கொண்டு சென்றனர்  மேலும் இந்நிகழ்வின் போது இவர்களது இருசக்கர வாகனங்கள் காவல் துறையினரால் உள்ளே அனுமதிக்க படாமல்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .  அதனை தொடர்ந்து ஜோதி இங்கிருந்து தொடங்கி பாஞ்சாலங்குறிச்சிக்கு  கொண்டு செல்லப்பட்டது.

ஜோதி கொண்டு வர தடையும் - நீக்கமும்

முன்னதாக, கட்டபொம்மனை தூக்கிலிட்ட கயத்தாற்றில் இருந்து ஜோதி கொண்டு வர முயன்ற போது காவல்துறையினர் இரண்டு சக்கர வாகனத்திற்கு அனுமதி மறுத்தனர் இதையடுத்து ஜோதி அங்கேயே நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியினர் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆலய விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு பகுதியில் இருந்து ஜோதிகள் தடையின்றி கொண்டுவர அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

போலீசார் குவிப்பு

வீரசக்க தேவி  உற்சவ ஆலய திருவிழாவையொட்டி திருச்செந்தூர், பாஞ்சாலங்குறிச்சி போன்ற பகுதிகளில்  காவல்துறையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

பி.முரளிகணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Local News, Tuticorin