முகப்பு /செய்தி /தூத்துக்குடி / போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம் - தூத்துக்குடி துறைமுகம் எச்சரிக்கை

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி துறைமுகம்

Tuticorin VO Chidambarananar port | தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக சில தனியார் ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் வேலை என்ற பெயரில் போலி நிறுவனங்கள் முகவர்கள் கூறுவதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என தூத்துக்குடி வ உ சி துறைமுக ஆணையம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுக ஆணையத்தில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக சில தனியார் ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் பொதுமக்களிடம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வ.உ.சி துறைமுக ஆணையம் இன்று பொது மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வ உ சிதம்பரனார் துறைமுகம் ஆணையம் மத்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.

இதையும் படிங்க: முதலமைச்சராக சித்தராமையா தேர்வு? - ரகசிய வாக்கெடுப்பில் சிவக்குமாருக்கு காத்திருந்த அதிர்ச்சி?

 தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் காலி பணியிடம் நிரப்பும் நடவடிக்கை மத்திய அரசின் துறைமுக ஆட் சேர்ப்பு விதிகளை பின்பற்றி அரசின் கொள்கைப்படி செய்தித்தாள் விளம்பரம் மற்றும் துறைமுக இணையதளம் வழியாக அறிவிப்பு செய்யப்பட்டு வெளிப்படையான முறையில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் துறைமுகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாத மோசடி நிறுவனங்கள் ஏஜென்சிகள் முகவர்கள் ஆகியோரை நம்பி ஏமாற வேண்டாம். மேலும் பொதுமக்கள் போலி நபர்களை நம்பி எவ்வித பதிவையும் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி துறைமுக ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செய்தியாளர்- பி.முரளி கணேஷ்

First published:

Tags: Local News, Tuticorin