தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் 150க்கும் மேற்பட்டோரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
தூத்துக்குடியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைப்பயணமாக வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணி மற்றும் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டெர்லைட் கலவரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அப்பொழுது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அனுமதிக்காதைத் தொடர்ந்து போராட்டத்தின் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சி.ஆர்.பி.எஃப் வீரர் கைது...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sterlite