முகப்பு /செய்தி /தூத்துக்குடி / ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ திமிங்கலம் எச்சம் பதுக்கல்.. அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலம் எச்சம்

பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கலம் எச்சம்

18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சம் விற்பனை செய்ய முயன்றபோது அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தடை செய்யப்பட்ட சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள 18 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நறுமண பொருள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் திமிங்கலம் எச்சமான தடை செய்யப்பட்ட ஆம்பர்  கிரீசை தூத்துக்குடியில் ஒரு கும்பல் விற்பனை செய்ய முயல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் 18 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரிசை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: செப்டம்பர் 30க்கு பிறகும் ரூ.2000 நோட்டுகள் செல்லும்.... ஆர்.பி.ஐயின் விளக்கம் இதுதான்...

இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வரன் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அணில், ஆனந்தராஜ், பெத்தேன் ஆகிய நான்கு பேரை  மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்து ஆம்பர் கிரிசை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரிசின் மதிப்பு ரூ. 30 கோடி என கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீசை பதுக்கி விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்- பி.முரளி கணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Crime News, Local News, Thoothukudi