தேனி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்களில் மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை ( June 17 - வெள்ளிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக, உப்பார்பட்டி, சடையால்பட்டி, டொம்புச்சேரி, பத்ரகாளிபுரம், உப்புக்கோட்டை, காமராஜபுரம், மாணிக்காபுரம்,
போடேந்திபுரம், வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தேனி துணை மின் நிலையத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக,
தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, பாலன்நகர், ஆதிபட்டி, வாழையாத்துபட்டி , கோடாங்கிபட்டி, ஆரம்டிசி காலனி, வெங்கடாசலபுரம், தப்புகுண்டு, முத்துத்தேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம்
மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தேனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.