தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஸ்ரீசனிபந்தன ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி திருநாளை முன்னிட்டு 7வது ஆண்டாக பால்குடம் எடுத்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
சுயமாக தோன்றிய அனுமந்தராயர் கோயிலுக்கு வருபவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், காரியசித்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிவர்த்தி பெறுவதாக கூறப்படுவதால் கோயிலின் புகழ் தேனி மாவட்டத்தை கடந்து வெளி மாவட்டங்களுக்கும் பரவியதால் இக்கோயிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகின்றனர்.
கோயிலில் அனைத்து சனிக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் காணப்படும் நிலையில்
சிறப்பு வாய்ந்த அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயருக்கு உகுந்த சிறப்பு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள், நெய்யபிஷேகம், அனுமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்படுவதை காண ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவர்.
இதையும் படிங்க : தேனி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் - ஒருவழிப் பாதை விவரங்கள்
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni