தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் குமுளி கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், கோயில் நிர்வாகிகள் சார்பாக ஸ்ரீதுர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருவிழா டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் திருவிழாவில் துர்க்கை அம்மனுக்கு சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.
இதையும் படிங்க : தேனியில் கிடுகிடுவென உயர்ந்த மல்லிகை பூ விலை.. எவ்வளவு தெரியுமா?
துர்க்கை அம்மனுக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, திக் பலி , முதற்கால யாகசாலை பூஜைகள் யாகசாலை பிரவேசம் , வேதிகா அர்ச்சனை, தீபாராதனை சாற்று முறை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் , விக்னேஸ்வர பூஜை, மூல மந்திர ஹோமம் , நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகள் முடிவடைந்த பின்னர் ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது .
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
துர்க்கை அம்மனுக்கு பூஜைகள் செய்து சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில், கூடலூர், கம்பம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni