தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் . இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நிகழ்வான கொடியேற்றம் நிகழ்ச்சி தற்போது தொடங்கியது. கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது கொடி மரத்திலிருந்து திடீரென பால் வடிந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கோயிலுக்கு வருகை தந்து ஆச்சரியத்துடன் பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.
இதையும் படிங்க | தேனி வீரப்ப அய்யனார் கோவில் சித்திரை திருவிழா.. குதிரை வாகனத்தில் நகர்வலம்..
பின்னர் மூலவருக்கு பூஜைகள் நடைபெற்ற பின் கொடி மரத்துக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலய மூலவரான பகவதி அம்மனுக்கு வண்ண பட்டு உடுத்தி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது
கொடி மரத்தில் பால் வடிந்ததால் அதனை காண ஏராளமான பொதுமக்கள் கோவில் வளாகத்திற்கு குவிந்து அதிசிய நிகழ்வை பக்தி பரவசத்துடன் பார்த்து சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Temple, Theni