தேனி மாவட்டம் அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான குமுளி, கம்பம் மெட்டு,அன்னையார் தொழு, நெடுங்கண்டம், கட்டப்பனை, சாந்தாம்பாறை ஆகிய இடுக்கிமாவட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் ஏலத்தோட்டங்களில் 75 சதவீத தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் வருடந்தோறும் ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது இடுக்கி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஏலச்செடிகளில் ஏலக்காய்கள் நன்கு விளைந்து அறுவடை செய்யப்படும் தருணத்தில் வேர் அழுகல் மற்றும் தட்டை அழுகல் நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது எனவும், காற்றினால் தட்டை ஒடிந்து, விளைந்த ஏலக்காய்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி நெடுங்கண்டம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் ஏலக்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என தனது தோட்டத்தில் இருந்த ஏழை செடிகளை வெட்டி உள்ளார்.
இதையும் படிங்க : உடல் அழுகிய நிலையில் 14 நாட்களே ஆன பெண் சிசு மீட்பு... தேனி அருகே அதிர்ச்சி!
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி பிஜு இவருக்கு சொந்தமாக ஏலக்காய் தோட்டம் உள்ளது. விளைவிக்கப்படும் ஏலக்காய்களுக்கு சமீபகாலமாகவே அங்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பதால் மிகுந்த மனவிரக்தியில் இருந்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பு கிலோ ஏலக்காய் விலை 3000 ஆயிரம் ரூபாய் வரை கிடைத்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பின்னர் கிலோ ஏலக்காய் வெறும் 600 ரூபாய் மற்றும் 700 ரூபாய் மட்டுமே விலை கிடைத்து வந்துள்ளது. இதனிடையே விவசாயி பிஜு தான் விளைவித்த ஏலக்காய்களை விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அப்போது வியாபாரிகள் கிலோவிற்கு 800 ரூபாய் மற்றும் 700 ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பிஜு ஆவேசமடைந்து தனக்கு சொந்தமான ஏலக்காய் தோட்டத்தை முழுவதுமாக வெட்டி சாய்த்துள்ளார். பிஜீவின் இத்தகைய செயலை கண்ட பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் விவசாயி பிஜுவை சமதானப்படுத்தினர்.
இதனிடையே விவசாயத்திற்க்கென முதலீடு செய்த பணமும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் மத்திய, மாநில அரசுகளும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். இதற்கிடையே விவசாயி பிஜுவின் செயல் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சம்பவம் குறித்து தேனி மாவட்ட ஏல விவசாயிகள் கூறுகையில் , "ஏல விவசாயத்தில் ஆண்டுக்கு 6 முறை வெள்ளாமை பெற முடியும். ஆனால் கடந்த 3 வருடங்களாகவே ஆண்டுக்கு 6 முறை விளைச்சல் எடுக்க கூடிய நிலைமாறி 4 முதல் 5 முறை மட்டுமே விளைச்சல் எடுக்க முடிகிறது. அதுவும் முழுமையான விளைச்சலைப் பெற முடியவில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
விலை ஏறிய நேரத்திலும் ஏலச் செடியில் தாக்கிய நோய்க் காரணமாக ஏலக்காய் மிகவும் வரத்து இல்லாமல்போனது. தற்போது ஏலக்காய் சந்தையில் 800 ரூபாய் முதல் விற்பனையாகி வருகிறது . இதனால் பல ஏல விவசாயிகள் மிகுந்த விரக்தியில் உள்ளனர் இந்தாண்டு இடிக்கி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் ஏலக்காய் அழுகிப் போதிய விளைச்சலைப் பெற முடியவில்லை" என்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agriculture, Local News, Theni