முகப்பு /தேனி /

யானைகள் இடம்பெயர்ந்தது.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி..

யானைகள் இடம்பெயர்ந்தது.. சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதி..

X
சுருளி

சுருளி அருவி

Suruli Falls : சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். 

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. அருவியில் குளிப்பதற்காக நாள்தோறும் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சுருளி அருவி வனப்பகுதிகளில் யானை, காட்டெருமை, மான், கரடி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பது வழக்கம்.

தற்போது தேனி மாவட்டத்தில் கோடைவெயில் அதிகமாக இருந்தால் சுருளி அருவிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. முற்றிலும் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாமலும் காணப்பட்டது. சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.

மேலும் தடை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி காணப்பட்ட சுருளி அருவியில் சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலை வனப்பகுதியில் குட்டிகளுடன் கூடிய 8 யானைகள் முகமிட்டு இருந்தது. இதனால் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நீடித்தது.

சுருளி அருவி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கடந்த 2 நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக சுருளி அருவியில் லேசான அளவு நீர் வரத்தொடங்கியது. மேலும் சுருளி அருவியில் முகாம் இட்டு இருந்த யானைகளும் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்த காரணத்தினால் தற்போது சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பணிகளை வனத்துறையினர் அனுமதித்து வருகின்றனர். கோடை காலம் என்பதால் சுருளி அருவிக்கு ஆனந்த குளியலுக்காக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அருவியில் குளித்து விடுமுறையை கழித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Theni