முகப்பு /தேனி /

தேனியில் தொடங்கிய குடற்புழு நீக்க முகாம்.. பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் விநியோகம்!

தேனியில் தொடங்கிய குடற்புழு நீக்க முகாம்.. பள்ளி மாணவர்களுக்கு மாத்திரைகள் விநியோகம்!

X
தேனியில்

தேனியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்

Theni | தேனி மாவட்டத்தில் தேசிய குடல் புழு நீக்கும் முகாமினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பள்ளி மாணவிகளுக்கு மாத்திரைகளை வழங்கி துவக்கி வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni Allinagaram | Theni

தேனி மாவட்டத்தில் தேசிய குடல் புழு நீக்கும் முகாமினை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பள்ளி மாணவிகளுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரையை கொடுத்து துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் அரண்மனைப் புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு குடல் புழு நீக்கும் மாத்திரையை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர் .வி. ஷஜீவனா வழங்கினார். தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியில் வாழும் ஒன்று முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

குடல் புழுவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முழுவதும் தமிழக அரசு உத்தரவின் பெயரில் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் குடல் புழுவை நீக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் குடல் புழுவை நீக்கும் முகாம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் துவங்கப்பட்டது.

மாவட்டத்தில் செயல்படும் 162 துணை சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமும் தேனி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளி குழந்தைகள்

மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் , 20-30 வயதுடைய பெண்களுக்கும் , குடல்புழுநீக்கம் மாத்திரைகள் சுகாதாரத்துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ளாத மாணவ மாணவிகள் மற்றும் பெண்களுக்கு வரும் 21-2-23 அன்று குடற்புழு மாத்திரைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Theni