முகப்பு /தேனி /

கொடுவிலார்பட்டியில் ரத்ததான முகாம்.. ஆர்வமுடன் பங்கேற்ற தேனி மாணவர்கள்..

கொடுவிலார்பட்டியில் ரத்ததான முகாம்.. ஆர்வமுடன் பங்கேற்ற தேனி மாணவர்கள்..

X
கொடுவிலார்பட்டியில்

கொடுவிலார்பட்டியில் ரத்ததான முகாம்

Theni News : தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் அமைந்துள்ள கம்மவார் சங்கம் கல்லூரி வாளகத்தில், கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரி - தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. இதில் கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் நம்பெருமாள், கல்லூரியின் முதல்வர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த ரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இதில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர்.

மேலும் இந்த ரத்ததானம் முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்த நாளங்களை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மேலாளர் பிரியா, ரத்த வங்கி அலுவலர் கலையரசன், ஆகியோர் ரத்த மாதிரிகளை சேகரிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ரத்ததான முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் நாகராஜ், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் சுப்பிரமணி, நம்பிக்கை மைய ஆலோசகர் முத்துலட்சுமி, சுகாதார ஆய்வாளர் பிரபுராஜா, ரெட் கிராஸ் சுருளி வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் பங்கேற்று ரத்தம் வழங்கிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செல்வகுமார் ஏற்பாடுகளை செய்து இருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் சுகாதார பிரிவு அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

First published:

Tags: Local News, Theni