தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் 155 பயனாளிகளுக்கு ஏழு லட்ச ரூபாய்மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நலத்திட்ட உதவிகள்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தெரிய வேண்டிய அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்தும் குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்தவர்கள் மட்டுமல்லாது குழந்தை திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கும் தண்டனை உள்ளது என்பதை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட 12 திட்டங்களின் கீழ் 155 பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வழங்கினார்.
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni