தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தை அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
சுருளி அருவி
சுருளி அருவியில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகளவிலான பக்தர்கள் கூட்டம் கூடுவதை பார்க்க முடியும்.குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை நாட்களில் அதிகமான பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பதால் அதிகமான பக்தர்கள் கூடுகின்றனர்.
இன்று விசேஷமான தை அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர். பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர்விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்துவிட்டு தங்களது இல்லத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோவிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தினர்.
பின்னர், அங்குள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.
செய்தியாளர்: சுதர்ஷன், தேனி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Theni