தேனி மாவட்டம் கம்பம் பகுதி பொதுமக்கள் தங்களது இல்லங்களில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
வெறிநோய் தடுப்பூசி
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வெட் பிளஸ் பெட் கிளினிக் மற்றும் கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து செல்லப் பிராணிகளுக்கான கட்டணம் இல்லா வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது .
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் ரேபிஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை தற்காத்து கொள்ள ரேபீஸ் தடுப்பூசி செல்லப் பிராணிகளுக்கு அவசியம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர் .
செல்லப் பிராணிகளை தாக்கும் வெறி நோய் என்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகவும் குணப்படுத்த முடியாத நோயாக உள்ளது எனவும் மூளையை தாக்கக்கூடிய நோயாக உள்ளது. இந்த நோய் தாக்கிய செல்லப்பிராணிகள் அல்லது விலங்குகள் மனிதர்களை கடிக்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது நோயினால் பல உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் கம்பம் பகுதி பொதுமக்களுக்கு வெறிநாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் தங்களது செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவது எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் கம்பம் வெட் பிளஸ் பெட் கிளினிக் (VET PLUS PET CLINIC ) மற்றும் கம்பம் கிரீன்வேலி ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் நடத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ALSO READ | தேனியில் மாபெரும் யோகாசன போட்டி.. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் முகாமினை கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துவக்கி வைத்துள்ளார்.
இந்த முகாமானது கம்பம் கம்பராய பெருமாள் கோயில் தெருவில் நடைபெற்றது. இந்த முகாமில் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு தங்களது செல்ல பிராணிகளை அழைத்து வந்து இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி சென்றனர் .
இதுகுறித்து கால்நடை மருத்துவரான பாபுஜி கூறுகையில், ‘கம்பம் நகராட்சி ஒத்துழைப்போடு, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தாக்காமல் இருப்பதற்காக இந்த இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்த முகாம்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது செல்லப் பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி சென்றனர்.
செல்ல பிராணிகள் மூலம் மனிதர்களை அதிகமாக பாதிக்கக்கூடிய நோயாக ராபிஸ் நோய் உள்ளது. இதனை தடுக்க மூன்று மாதத்திற்கு மேல் உள்ள செல்லப் பிராணிகளுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்துவது அவசியம். அதேபோல் வருடத்திற்கு ஒரு முறை பூஸ்டர் டோஸ்ரேபிஸ் வேக்சின் எடுப்பதும் அவசியம்\" என தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Local News, Theni, Vaccine