முகப்பு /தேனி /

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Theni district | தேனி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம், போடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் சனிக்கிழமை (04-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, போடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

போ.அணைக்கரைப்பட்டி, போ.மீனாட்சிபுரம், குரங்கணி, போடி நகர் பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் பெரியகுளம் மின்கோட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி வடக்கு பிரிவு ஜம்புலிபுத்தூர் பீடரில் உள்ள மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

இதனால், ஆண்டிப்பட்டி அருகே உள்ள தர்மத்துப்பட்டி, ராஜப்பன்கோட்டை, தாதனூர், நடுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Theni