முகப்பு /தேனி /

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.. ரவீந்திரநாத் எம்பி பேசியது என்ன தெரியுமா?

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.. ரவீந்திரநாத் எம்பி பேசியது என்ன தெரியுமா?

X
ரவீந்திரநாத்

ரவீந்திரநாத் எம்பி

Theni News : தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Theni, India

தேனியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அக்குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம், பயிர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் எட்டப்பட்டுள்ள இலக்குகள், பயனாளிகளின் எண்ணிக்கை, திட்டங்களுக்குத் தேவையான நிதியுதவி போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து துறைவாரியாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறுகையில், “மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் பயனாளிகளுக்கு விரைவில் கொண்டு சேர்க்கும் வகையில் அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் மக்களுக்கு காலதாமதம் இல்லாமல் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும்” என்று குறிப்பிட்டார்.

மேலும் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் இதுவரை நிர்ணயிக்கப்பட்டு எட்டப்படாமல் உள்ள இலக்குகளை அடுத்த கண்காணிப்பு குழு கூட்டத்திற்குள் முடித்திடவும் அரசுத்துறை அலுவலர்களை வலியுறுத்துவதாக கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் தண்டபாணி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Theni