தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் மற்றும் மாநில உதவிபெறும் பள்ளி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு மருத்துவ கல்லூரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லையென்றால் மாநில அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினர். கூட்டத்தில் மாவட்ட கல்வி நிர்வாகிகள் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(Theni)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.