தேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 19 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று (மே 10) வரை கொண்டாடப்பட்டது.
செவ்வாய் இரவு தொடங்கி இன்று அதிகாலை முதலே பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி, சக்தி கரகம் மற்றும் முளைப்பாரிகள் எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன்களை செலுத்தி வருகின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்பம் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில். இந்தாண்டு திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் அக்னிசட்டிகள் எடுத்தும், முளைப்பாரி, கரகம், எடுத்து பக்தர்கள் கோவில் பகுதிக்கு வருவதால் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றப்பட்டது. கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 21 நாள்கள் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் அம்மனுக்கு மண்டகப்படி அமைத்து அபிஷேக ஆராதனைகள் செய்தனர். மேலும் கோயில் திருவிழா முடிந்த வேலையிலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர் பந்தல் அமைத்து குடிநீர் விநியோகம் உள்ளிட்டவைகளை அனைத்து கட்சியினர், சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர் .
செய்தியாளர் : சுதர்ஸன்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.