தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சுருளி அருவி அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரள பகுதியிலிருந்தும் ஏராளமானோர் சுற்றுலாவுக்காகவும், சுருளி ஆண்டவர் கோவிலில் வழிபாடு நடத்தி புனிதநீர் எடுத்துச் செல்வதற்காகவும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை நடத்திடவும் ஏராளமானோர் நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தைமாதம் மற்றும் ஆடிமாதம் அமாவாசை நாட்களில் இறந்த தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலையே ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் குவிந்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி பின்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்துவிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் பூதநாராயணன் கோவிலில், நவதாணியம் வைத்து வழிபாடு நடத்தியதுடன் அங்குள்ள சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்புப் பூஜைகளில் கலந்துகொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.