தேனி மாவட்டத்தில் 33-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 671 இடங்கள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த தடுப்பூசி முகாம்கள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார்(பொறுப்பு) மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசின் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி, தேனி மாவட்டத்தில் 671 இடங்களில் இந்த சிறப்பு முகாம் தடுப்பூசி நடக்கிறது. இந்த முகாம்கள் மூலம் 60,390 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு தேவையான தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆட்சியர் முரளிதரன் தலைமையில், பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் கால மீட்பு மற்றும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி தயார் நிலையில், அனைத்திற்கும் உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.