தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்து கிலோ தேங்காய் 27 ரூபாய்க்கு விற்பனையாவதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கரும்பு, நெல், மா உள்ளிட்ட பணப் பயிர்களை தவிர தென்னையும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்டவை வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்து, படிப்படியாக தேங்காய் உற்பத்தி உயர்ந்து வருகிறது. அதேபோல் தேங்காய் வரத்தும் அதிகரித்ததால் அவற்றின் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு கிலோ 45 ரூபாய் வரை விற்பனையான தேங்காய் விலை தற்போது கிலோ 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளதால், கம்பத்தில் தேங்காய்களை கொள்முதல் செய்ய வெளியூர் வியாபாரிகள் வரவில்லை. இதனால் தேங்காய்கள் தேக்கமடைந்துள்ளன’ என்று தெரிவித்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.