முகப்பு /தேனி /

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சித்திரை மாத சிறப்பு வழிபாடு..

பெரியகுளம் ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சித்திரை மாத சிறப்பு வழிபாடு..

X
சித்திரை

சித்திரை சிறப்பு வழிபாடு

Periyakulam Echamalai Mahalakshmi Temple : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் சித்திரை மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Theni, India

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் ஒவ்வொரு பிரதோஷத்தை முன்னிட்டும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இக்கோயில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர். ஆன்மீக சிறப்பு நாட்களிலும், பிரதோஷ நாளிலும் நடைபெறும் அபிஷேக வழிபாட்டை காண பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

அந்த வகையில் சித்திரை மாதத்தை முன்னிட்டு மகாலட்சுமி கோயிலில் உள்ள அதிகார நந்தீஸ்வரன் சிலைக்கும், நாகராஜர் சிவனுக்கும் 5 வகை சாதங்களை கொண்டும் பால், தயிர் பன்னீரை கொண்டும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த வழிபாட்டில் மகாலட்சுமி சிவகாமி தாயாருக்கும் அதிகார நந்தீஸ்வருக்கும், நாகராஜனுக்கும் மற்றும் சிவனுக்கும் அரளி பூ, செம்பருத்தி பூ, மல்லிகைப்பூ, ஜாதி பூ, தாமரைப்பூ ஆகியபூக்களைகொண்டும், அபிஷேகமும் செய்யப்பட்டது.

இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்தை வழிபடும்போது சிவனின் அருளும், நந்தீஸ்வரர் அருளும் கிடைக்கும் என்றும், மகாலட்சுமி கோயிலில் வழிபாடு செய்வதன் மூலம் நல்ல செல்வாக்கு கிடைக்கும் எனவும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பதும், பெண்களுக்கு நன்மைகள் கிடைத்து தொழில் வளர்ச்சி அடைவார்கள் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த கோயிலுக்கு வரும்பக்தர்களுக்குபிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைக்கான ஏற்பாடுகளைடாக்டர்மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார். ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் அதிகமான பக்தர்கள் இந்த கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது வழக்கமாக காணப்படும் நிலையில் சித்திரை மாத சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    First published:

    Tags: Local News, Theni