தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையில் முக்கிய இடத்தை பிடிப்பது கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து ஆகும். பொங்கல் பண்டிகையன்று புதுப்பானையில் மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துக்கள் கட்டி அலங்காரம் செய்து, புதிய அரிசியால் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக கரும்பு வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அறுவடைக்கு தயார்:
பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படுகிறது. இந்த மஞ்சள் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பே அறுவடை செய்யப்பட உள்ள நிலையில் தஞ்சையில் பல பகுதிகளில். விவசாயிகள் மஞ்சள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே உள்ள பல கிராமங்களில் பலர் மஞ்சள் சாகுபடி செய்து வரும் நிலையில் பாச்சூர் கிராமத்தில் மஞ்சள் சாகுபடி செய்து வரும் சில விவசாயிகளிடம் கேட்டு அறிந்தோம்.
பட்டுக்கோட்டை| போகி பண்டிகைக்கு இந்த பொருட்களை தீயிட்டு எரிக்க கூடாது - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
செய்தியாளர்: ஆனந்த், தஞ்சாவூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur