முகப்பு /செய்தி /தஞ்சாவூர் / "கைலியுடன் வந்தால் அனுமதியில்லை" தடை விதித்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

"கைலியுடன் வந்தால் அனுமதியில்லை" தடை விதித்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

தஞ்சை வி.ஏ.ஓ.

தஞ்சை வி.ஏ.ஓ.

Thanjavur VAO | தஞ்சாவூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருபவர்கள் கைலி, நைட்டி அணிந்து வர வி.ஏ.ஓ. கரிகாலன் தடை விதித்திருந்தார்.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலி அணிந்து வரத் தடை விதித்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே கரிகாலன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இங்கு அலுவலகத்தில் சான்றிதழ் கேட்டு வரும் நபர்கள் கைலி, கால் சட்டை ஆகியவை அணிந்து வரக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் கைலி அணிந்து வருபவர்களை அலுவலகத்தில் உள்ளே விட மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்க வந்த தந்தை ஒருவர் கைலி அணிந்து கொண்டு வந்ததால் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவர் சான்றிதழுக்காக வெளியே காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

https://youtu.be/vKHVyZcMm4Y

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், செங்கிப்பட்டியை சுற்றி சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முழுவதும் விவசாயக் கூலி தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள். எனவே அனைவரும் கைலி போன்றவை அணிந்துதான் வேலைக்கு செல்வார்கள். அப்படி இருக்கும்போது இங்கு கைலி அணிந்து வரக்கூடாது என்பது கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை, மேலும் அலுவலகத்திற்குள் கைலி அணிந்து வரக்கூடாது என்று சட்டமும் கூறவில்லை என அவர்கள் கூறுகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கைலியுடன் வர தடை விதித்த விஏஓவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செய்தியாளர்: எஸ்.குருநாதன், தஞ்சாவூர்.

First published:

Tags: Thanjavur