தஞ்சாவூரில் மது அருந்தி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில், மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூரில் கீழவாசல் பகுதியில் உள்ள மீன்சந்தை அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. மீன் சந்தைக்கு ஏராளமானோர் வருவதால், டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பாரில் காலை 6 மணி முதலே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு, காலை 11 மணி அளவில், மது வாங்கிக் குடித்த 60 வயதான குப்புசாமி என்பவர், சிறிது நேரத்தில் வலிப்பு வந்து உயிரிழந்தார்.
அதே இடத்தில் கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த 36 வயதான விவேக் என்ற மீன் வியாபாரியும், மது குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தஞ்சையில் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மதுவை குடித்த இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், சட்டவிரோதமாக மது விற்ற பார் மற்றும் டாஸ்மாக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பார் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற வேண்டுமா? - அண்ணாமலை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Thanjavur