வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இலங்கையில் கரையை கடந்த நிலையில் அதன் எதிரொலியாக தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று தஞ்சை மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்ட நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் மிதமான மழை தென்பட்ட நிலையில் பிறகு விட்டு விட்டு பெய்த மழை மாலையில் வெளுத்து வாங்க தொடங்கியது.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, மருங்குளம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சை நகர், பூதலூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur