முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சை புதிய அருங்காட்சியகத்தில் குவிந்திருக்கும் பொக்கிஷங்கள்.. மெய்மறந்து போக தவறாம வாங்க..

தஞ்சை புதிய அருங்காட்சியகத்தில் குவிந்திருக்கும் பொக்கிஷங்கள்.. மெய்மறந்து போக தவறாம வாங்க..

X
தஞ்சை

தஞ்சை அருங்காட்சியகம்

Thanjavur New Museum : தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு அருங்காட்சியகத்தில், 7டி திரையரங்கம், அரியவகை வெளிநாட்டு பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதுடெல்டா பகுதி மக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் விருந்து படைத்து வருகிறது.

தஞ்சாவூர் பழைய ஆட்சியர் அலுவலகம்:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம், பிரிட்டிஷ் கட்டட வல்லுனர் ராபர்ட் சிஷோலம் என்பவரால், 1896 முதல் 1900 ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்தோ- சராசனிக் கட்டடக் கலை பாணியை சார்ந்த இந்த கட்டடத்தில், 120 ஆண்டுகளாக, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.

தஞ்சாவூர் - திருச்சி- தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகம் 2015-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாதுகாத்து, அருங்காட்சியகமாக மாற்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ. 8.4 கோடி மதிப்பீட்டில், அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

அருங்காட்சியகம்:

இந்த அருங்காட்சியகத்தில் வேளாண் துறை சார்பில் பழமையான வேளாண் கருவிகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் மற்றும் தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளின் செயல்பாடுகள் குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பழங்கால பொருட்கள், பழங்காலத்து சிலைகள்போன்ற எண்ணற்ற வரலாற்று சிறப்புகள் மற்றும் நம் பாரம்பரிய கலைகள், நம் முன்னோர்கள் விவசாயத்திற்கு பயண்படுத்திய கருவிகள் என நாம் பார்த்து வியந்து போகக்கூடிய வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

Also Read:  ஐஸ்கிரீம் பானிபூரி சாப்பிட்டிருக்கீங்களா? மதுரை தெப்பக்குளத்தில் மக்களை கவர்ந்திழுக்கும் பானிபூரி ஸ்டால்..

மேலும் இதில், நவதானியங்கள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பெரிய கோவில் மாதிரிகள் உள்ளன. பல மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால உலோக சிற்ப காட்சியகம், கற்சிற்ப காட்சியகம், சரஸ்வதி மஹால் நுாலக காட்சியகம், '7டி' திரையரங்கம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் டிக்கெட் எவ்வளவு?

அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியவர்களுக்கு - 20, சிறுவர்களுக்கு - 10 ரூபாய், 7 டி திரையரங்கத்திற்கு 75 ரூபாய், பறவைகள் பூங்காவிற்கு - 150 ரூபாய் மேலும் 3 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டிக்கெட் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அருங்காட்சியகத்தை பார்த்த பொதுமக்கள் கூறுகையில், ‘ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு விதமான பொக்கிஷங்களை பார்ப்பது போல் உள்ளது. 7டி திரையரங்கம் தஞ்சையில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. அதும் வியப்பான ஒரு தருணத்தை கொடுத்து பறவைகள் பூங்காவும் மனதை லயக்க செய்கிறது. தஞ்சையில் நிறைய சுற்றுலா தளங்கள் இருந்தாலும் இது மேலும் சிறப்பாக இருக்கிறது. பழமையான இந்த ஆட்சியர் அலுவலகத்தைக் காக்கும் விதமாக அருங்காட்சியகமாக மாற்றியதற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளும் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tamil News, Thanjavur, Thanjavur Temple