முகப்பு /தஞ்சாவூர் /

பிளாஸ்டிக் குப்பைகளால் கழிவுநீர் பாதையில் அடைப்பு... அவதிப்படும் மக்கள் - தஞ்சை மாநகராட்சி கவனிக்குமா?

பிளாஸ்டிக் குப்பைகளால் கழிவுநீர் பாதையில் அடைப்பு... அவதிப்படும் மக்கள் - தஞ்சை மாநகராட்சி கவனிக்குமா?

X
பாதிக்கப்படைந்த

பாதிக்கப்படைந்த கழிவுநீர் கால்வாய்

Thanjavur News | தஞ்சை ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பைக்கிடக்கின் அருகிலுள்ள கழிவுநீர் பாதை பிளாஸ்டிக் கழிவுகளில் நிரம்பிவழிகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சையில் வடிகாலை பிளாஸ்டிக் கழிவுகள் ஆக்கிரமித்துள்ளதால் சாலையோரத்தில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தஞ்சை ஜெபமாலைபுரம் மாநகராட்சி குப்பை கிடக்கின் பின்புறம் சூர்யா நகர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கோவில்களுக்கும் இந்த சாலை வழியாக பக்தர்களுகம் அதிகளவில் சென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சாலை அருகே உள்ள காலி இடத்தில் காலை, மாலை நேரங்களில் இளைஞர்கள், சிறுவர்களும் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

வடிகாலில் அடைப்பு:

இந்த நிலையில் அந்த சாலையோரத்தில் செல்லும் கழிவுநீர் வடிகாலில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்கி உள்ளது. குறிப்பாக அங்குள்ள தரைபாலத்தின் கீழ் கழிவுநீர் செல்லும் பாதையை பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்துள்ளன. இதனால் அந்த பாதை வழியாக கழிவுநீர் செல்வது தடைபட்டுள்ளது. இதன்காரணமாக சாலையோரத்தில் கழிவுநீர், குளம் போல் தேங்கி கிடக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளும் கழிவுநீரில் மிதக்கின்றன. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

தொற்று நோய் பரவும் அபாயம்:

இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தபகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

First published:

Tags: Local News, Thanjavur