தஞ்சாவூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தஞ்சை நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் பாஜகவினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதாக கூறி அதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்த நிலையில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுராவில் தேர்தலுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இடது முன்னணி மற்றும் எதிர்க்கட்சி ஊழியர்களுக்கு எதிராக பாஜகவினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காட்டுமிராண்டித்தனமான வன்முறை வெறியாட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறுது என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் அபிமன்னன் முன்னிலை வகித்தார்.இதில் தஞ்சை ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 20- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்து காவல் மாற்று பாதையை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.