முகப்பு /தஞ்சாவூர் /

பங்குனி உத்திர திருவிழாவிற்கு தயாராகி வரும் சுவாமிமலை.. என்னென்ன நடைபெறும் தெரியுமா? 

பங்குனி உத்திர திருவிழாவிற்கு தயாராகி வரும் சுவாமிமலை.. என்னென்ன நடைபெறும் தெரியுமா? 

பங்குனி உத்திர திருவிழாவிற்கு தயாராகி வரும் சுவாமிமலை

பங்குனி உத்திர திருவிழாவிற்கு தயாராகி வரும் சுவாமிமலை

Swamimalai Temple | தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Last Updated :
  • Thanjavur, India

அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாக திகழ்வது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில். இக்கோவிலில் வரும் 4ம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கவுள்ளது. அதன்படி, 4ம் தேதி காலை வள்ளி தெய்வாணை, சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்த வாரி நிகழ்ச்சியும், இரவு வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நாட்டிய குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து, 6ம் தேதி இரவு விக்னேஸ் வர பூஜை நிகழ்ச்சியும், 7ம் தேதி காலை வள்ளி தேவசேனா, சண்முக பெருமாள், வேடமூர்த்தி, வள்ளிநாயகி நாரதர், நம்பிராஜன்,நந்த மோகினி உற்சவ மண்டபம் எழுந்தருளிகின்றனர். 8ம் தேதி காலை அரசலாற்றில் யானை விரட்டுதல் நிகழ்ச்சி, அளவந்திபுரம் நடுத் தெருவில் இருந்து சீர் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், சண்முகபெருமாள், வள்ளிநாயகியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    பின்னர் 9, 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி யும், 11ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், வள்ளி தேவசேனா, சண்முகசாமி புறப்படுதல், வேடமூர்த்தி, வள்ளி நாயகியார் பல்லக்கில் வீதி உலா காட்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி காலை சண்முக பெருமாளுக்கு 108 சங்காபிஷேகமும், இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கோவில் இணைஆணையர் மோகன சுந்தரம், துணை ஆணையர் உமாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Thanjavur