முகப்பு /தஞ்சாவூர் /

பெண்களின் வீர செயல்களை போற்றும் கற்சிலைகள்.. தஞ்சையில் ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்!

பெண்களின் வீர செயல்களை போற்றும் கற்சிலைகள்.. தஞ்சையில் ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடித்த வரலாற்று ஆய்வாளர்கள்!

பெண்களின் வீர செயல்களை போற்றும் கற்சிலைகள்

பெண்களின் வீர செயல்களை போற்றும் கற்சிலைகள்

Thanjavur News : தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலில் பெண்களின் வீர செயல்களை போற்றும் வகையிலான கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருபுவனேஸ்வரர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதையடுத்து மீண்டும் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கோவிலுக்கு திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் வந்து பார்வையிட்டனர். அப்போது கோவில் கருவறை கோமுகியில் (தீர்த்தம் வெளி வரும் பாதை) பெண்களின் வீரத்தை போற்றும் வகையிலான சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

ஆயுதம் ஏந்திய பெண்கள் :

பழமையான கோவில்களில் ஆண்களின் வீரச்செயலை போற்றும் வகையிலான சிற்பங்கள் ஏராளமாக இருப்பதை காணலாம். ஆனால் இங்கு பெண்களின் வீரத்தை போற்றும் சிற்பங்கள் அந்த காலத்திலேயே வடிக்கப்பட்டு இருப்பது வரலாற்று ஆய்வாளர்களை வியப்படைய செய்துள்ளது.

இதையும் படிங்க : எமதர்மனை நீதிபதியாக கருதி வணங்கும் பக்தர்கள்.. தஞ்சாவூரில் எமதர்மராஜா கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

பெண்கள் கையில் ஆயுதம் :

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது, “திருமண்டங்குடி திருபுவனேஸ்வரர் கோவிலில் இருப்பது தமிழ்நாட்டில் வேறெங்கும் காண கிடைக்காத அரிய சிற்பங்களாகும். அதாவது, நடுகற்களில் ஊர் மக்களை காக்கும் பொருட்டு, ஆண்கள் கையில் ஆயுதம் ஏந்தி விலங்குகளை தாக்குவது போன்ற சிற்பங்கள் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு உள்ள சிற்பங்களில் பெண்கள் கையில் ஆயுதம் ஏந்தி நிற்கின்றனர்.

கழுத்தில் தாக்கும் பெண் :

திருபுவனேஸ்வரர் கோவில் கருவறை கோமுகியில் இத்தகைய அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன. யாழி (பழங்கால கற்பனைவிலங்கு) ஒன்று யானையை துரத்த, யானை குதிரையை துரத்த, ஒரு பெண் பயந்து மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கிறாள். மற்றொரு பெண் சிறிய வாள் ஒன்றை கையில் ஏந்தி காட்டுப்பன்றி போன்ற ஒரு விலங்கை கழுத்தில் தாக்கும் காட்சிகள் சிற்பங்களாக அழகுற வடிவமைக்கப்பட்டு உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல் நாட்டியமாடும் பெண்கள், சங்கநாதம் ஒலிக்கும் சிவ கணங்களின் சிற்பங்கள் வரிசையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 3ம் ராஜராஜன் (13-ம் நூற்றாண்டு) காலத்தை சேர்ந்த கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளன. சோழர் காலத்தில் திருப்பணி நடந்த கோவில்களில் இதுவும் ஒன்று.

பெண்களின் வீரம் :

top videos

    பல அரிய சிற்பங்கள் இக்கோவிலில் ஏராளம் உள்ளன. பெண்களின் கலை நயத்தையும், வீரத்தையும் அக்காலத்தில் எந்த அளவுக்கு போற்றியிருந்தால் ஒரு சிவாலயத்தின் கருவறை கோமுகியில் மக்கள் வழிபடுமிடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது.

    First published:

    Tags: Local News, Thanjavur