முகப்பு /தஞ்சாவூர் /

விளையாட்டு போட்டிகளில் திறமையை காட்டிய தஞ்சை சோழபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்..

விளையாட்டு போட்டிகளில் திறமையை காட்டிய தஞ்சை சோழபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்..

X
விளையாட்டு

விளையாட்டு போட்டிகளில் திறமையை காட்டிய தஞ்சை சோழபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்

Thanjavur News | தஞ்சை ஒரத்தநாடு அருகே சோழபுரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கான  விளையாட்டு விழா நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 105 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில் மாணவர்களுக்கு ஆண்டுதோரும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு போட்டிகள் நடத்த பள்ளி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

அந்த வகையில், கபடி, பலூன்கள் மூலம் பிரமீடு அமைத்தல், ஸ்கிப்பிங், ஜம்பிங் பால், கோகோ போன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத நிலையில் தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி பள்ளி ஆசிரியர்களே முன் நின்று மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக போட்டிகளை வெகு சிறப்பாக நடத்தினர். மேலும், இதில் சோழபுரம் கிராம மக்கள் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

First published:

Tags: Local News, Thanjavur