அகத்திய மாமுனிவர் வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். இந்த கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனகர் நாட்டில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு தீராத மனக்கவலை தீர்கும் என பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தீராத மனக்கவலை தீர்க்கும் அகத்தீஸ்வரர்:
இன்றைய நவீன உலகில் பெரும்பாலானவர்கள் மனக்கவலையில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களின் துன்பம் நீக்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி மனக்கவலைகளை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர்நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார்.
கோவிலில் இறைவன் அகத்தீஸ்வரர் சதுர வடிவ ஆவுடையார் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தனி சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில் தான் இத்தகைய அமைப்பில் சிவன் காட்சி அளித்ததாக வரலாறு உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவி பெரிய நாயகி, தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
இதையும் படிங்க : 'இது அரசுப்பள்ளி பேருந்து'.. தஞ்சாவூரில் ஊர் மக்கள் சேர்ந்து வாங்கிய ஸ்கூல் பஸ்!
இங்கு பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரராக இறைவன் இருக்கிறார். இதன் காரணமாக பெரியநாயகி பெண்களின் மன உறுதியை மேம்படச் செய்யும் தனி பண்பை தன்னகத்தை கொண்டுள்ளாள். தனது சன்னதி முன்பு மனச்சமையோடு வந்து கண்ணீர் மல்க வேண்டும் பெண் பக்தர்களின் கவலை போக்கும் தாய் உள்ளத்தோடு பெரியநாயகி வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
திருமண தடை - குழந்தை பாக்கியம் :
அடியவர்க்கு எல்லாம் எளியவராய் நின்றுஅருள்பாலிக்கும் அகத்தீஸ்வரர், வலது புறம் வள வன்ட அய்யனார் கோவிலுக்கும், இடதுபுறம் மகாமாரியம்மன் கோவிலுக்கும் மத்தியில் கோவில் கொண்டுள்ளார். இக்கோவிலில் நடை பெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியெம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.
திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 21 பிரதோஷ நாட்களில் தொடர்ச்சியாக வந்து நந்தியெம்பெருமான், ஈசன்அம்பாளை வழிபாட்டால் திருமண யோகம் கிட்டும், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கை, ஈசன், அம்பாள், நந்தியெம் பெருமானை ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னதி அமையபெற்றுள்ளது இக்கோவிலின் மேலும் ஒரு தனிசிறப்பு.
கடன் தொல்லை - நோய்கள் தீரும்
தீராத கடன் தொல்லை உள்ளவர்கள் கோனூர் நாடு அகத்தீஸ்வரரை 21 திங்கட்கிழமை தொடர்ச்சியாக அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, சகல யோகமிக்க பெருவாழ்வு கிடைக்க அருள்புரிவார்.
கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி 21 தீபங்கள் ஏற்றி அடிபிரதட்சனம் செய்து 48 நாட்கள் தொடர்ச்சியாக இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.
கல்வி, தொழில் மேன்மை அடைய மேலும் கோவிலில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜை நடைபெறும்.
அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை சாமியிடம் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் கல்வி, தொழில் மேன்மை அடையும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக தேய்பிறை அஷ்டமி அன்று கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித் தனியாக 3 தீபங்கள் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால் எந்தநிலை கண் திருஷ்டியாக இருந் தாலும் அகலும். தீராத பகை நீங்கி குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது ஐதிகம்.
பிரதோஷ பூஜை :
நேற்று பல கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில் இந்த கோனகர் நாடு கோவிலிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் தலத்தில் உள்ள அம்பாள் மற்றும் பைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிவன் பெரிய நாயகி அம்பாள் சன்னதியில் ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
பின்பு சன்னதியின் முகப்பில் உள்ள நந்திக்கு குங்குமம் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பழச்சாறு அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம்,பால் அபிஷேகம் போன்ற அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100-கும் மேற்பட்ட பக்கத்தர்கள் கலந்து கொண்டு சிவன் மற்றும் அம்பாளின் அருளை பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tanjore