முகப்பு /தஞ்சாவூர் /

கோனூர் நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்- திரண்ட பக்தர்கள்

கோனூர் நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்- திரண்ட பக்தர்கள்

X
தஞ்சை

தஞ்சை கோவில்

Thanajvur | தஞ்சாவூர் மாவட்டம் கோனூர் நாடு அகத்தீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

அகத்திய மாமுனிவர் வழிபட்ட திருத்தலங்களில் ஒன்று கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். இந்த கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோனகர் நாட்டில் அமைந்துள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இக்கோவிலில் வழிபட்டால் தீராத மனக்கவலை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

பிரதோஷ வழிபாடு:

சிவராத்திரி நாளான இன்று சனி பிரதோஷமும் சேர்ந்து சிறப்பு வாய்ந்த நாளாக அமைந்துள்ளது. தலத்தில் உள்ள அம்பாள் மற்றும் பைரவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிவன் பெரிய நாயகி அம்பாள் சன்னதியில் ருத்ராட்ச பந்தல் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

பிறகு நந்தியம்பெருமானுக்கு தைலாபிஷேகம், திரவியம் பொடி, மஞ்சள் பொடி, மாப்பொடி, நெல்லிப்பொடி, வில்வபொடி, அதிமதுரப்பொடி, பால், பஞ்சாமிர்தம், தயிர், நெய், தேன், எலுமிச்சை பழம் சாறு, இளநீர், சந்தனம், விபூதி, அனைத்து விதமான மூலிகைகள் கொண்டும் நந்தியம்பெருமானுக்கு சனி பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மாலையில் மங்கல இசையில் தொடங்கி பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடைபெற்றது. மேலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இவ்விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Thanjavur