தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (08-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் நகர துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால், கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தஞ்சாவூர் நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை பகுதிகள்:
புதுஆற்று கீழ்க்கரை, கருப்பாயி அம்பலக்காரத்தெரு, வெட்டுக்காரத்தெரு, பிரகதமணி மகால், அண்ணா மருத்துவமனை, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
Must Read : ராமேஸ்வரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
மேலும், மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur