முகப்பு /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Thanjavur district | தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சில துணைமின் நிலையங்களில் நாளை (18.02.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா மற்றும் திருவையாறு உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் தெரிவித்தார்.

மின் தடை பகுதிகள்:

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக, இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரந்தை, பள்ளி அக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபாநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவளம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

Must Read : அதியசம் நிறைந்த காஞ்சிபுரம் நடவாவி கிணறு - 48 படிகள், கிணற்றுக்குள் 12 தூண்களைன் கொண்ட அழகிய மண்டபம்!

இதேபோல, திருவையாறு, மேலத்திருப்பூந்துருத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோம் பெறும், திருவையாறு, கண்டியூர், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டைகரூர், கீழத்திருப்பூந்துருத்தி, மேலத்திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், நடுக்காவேரி, ஆச்சனூர், வைத்தியநாதன்பேட்டை, பனையூர், கடுவெளி,

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தில்லைஸ்தானம், பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், செம்மங்குடி, அணைக்குடி, திருப்பழனம், திங்களூர், ராயம்பேட்டை, காருகுடி, பொன்னாவரை, கல்யாணபுரம், புதுஅக்ரஹாரம், நடுக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur