தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் பகுதியில் பள்ளி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் இருந்தது. இந்த சிவகாமிபுரம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் அடங்கும். இதிலிருந்து வழங்கப்படும் தண்ணீர்தான் இப்பகுதி மக்களுக்கு பயனாக உள்ளது. இதன் தூண்கள் சிதிலமடைந்தது. இதன் அருகிலேயே தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து இருந்ததால் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் வேறு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த பணியும் நிறுத்தப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டபோது தண்ணீர் ஊறியதால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளிக்கு அருகில் தஞ்சை செல்லும் சாலையில் மீண்டும் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. தொடர்ந்து இந்த புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.ஆனால் பழுதடைந்துள்ள நிலையில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இன்னும் இடித்து அப்புறப்படுத்தப்படவில்லை.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இதன் அடிப்புறம் கான்கிரீட் பெயர்ந்து அபாய நிலையில் உள்ளது. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தற்போதே இந்த பழைய நீர்த் தேக்கத் தொட்டியை உடன் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur