தஞ்சாவூர் கோனூர் நாடு வடக்கூர் கிராமத்தில் உள்ளது மாணிக்க வாசகர் திருக்கோயில். கோனூர் நாடு 18 கிராமத்தை சேர்ந்த இக்கோயில் மிகவும் பிரசிதி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் விசேஷமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழாவில் பால்குட காவடி திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் விநாயகருக்கு எண்ணெய் பால், தயிர், நெய் உள்ளிட்ட பல அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாணிக்கவாசகர் கோயில் இருந்து கிராமத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பட்டவன் கோயிலுக்கு சாமி ஊர்வலம் சென்று அங்கிருந்து மதியம் ஒரு மணி அளவில் பால்குடம் காவடி எடுத்து பக்தர்கள் ஆலயம் வந்தடைந்தனர்.
இதில் கோனூர் நாட்டை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம், சடல் காவடியை பக்தி பரவசத்துடன் எடுத்தனர்.
கிராமத்தில் உள்ள சிறு வயது குழந்தைகளும் ஆர்வத்துடன் பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில்அன்னதானம் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் இரவில் மங்கள வாத்தியமும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சித்ரா பௌர்ணமி விழாவில் கோனூர் நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகர் அருளை பெற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thanjavur