முகப்பு /தென்காசி /

சாரல் மழையை பொருட்படுத்தாமல் சங்கரன்கோவிலில் பெண்கள் நடத்திய விளக்கு பூஜை..

சாரல் மழையை பொருட்படுத்தாமல் சங்கரன்கோவிலில் பெண்கள் நடத்திய விளக்கு பூஜை..

X
சங்கரன்கோவிலில்

சங்கரன்கோவிலில் பெண்கள் நடத்திய விளக்கு பூஜை

Tenkasi News : தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதியாபுரம் ஏழாம் தெருவில் வினை தீர்க்கும் விநாயகரின் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் 50க்கும் மேற்பட்ட பெண்கள்விளக்கு பூஜை நடத்தினர். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதியாபுரம் ஏழாம் தெருவில் வினை தீர்க்கும் விநாயகரின் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜை செய்தனர். வினை தீர்க்கும் விநாயகரிடம் தீபாராதனை செய்த தீபத்தை கொண்டு விளக்கு ஏற்றி பூஜை தொடங்கப்பட்டது.

சாரல் மழையிலும் நடைபெற்ற விளக்கு பூஜை

இந்த கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு இந்த விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. குழந்தைகள் மற்றும் பெண்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பக்தியுடன் பூஜைகள் செய்தனர்.

First published:

Tags: Local News, Tenkasi