தென்காசி மாவட்டம் சங்கரன்கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் கோயிலில் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மூன்று நாட்களில் மட்டும் சூரியனின் கதிர்கள் நேராக சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயம் நடைபெறும்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ளசங்கரநாராயணர் கோவிலில் ஹரியும் சிவனும் ஒன்றாக அமைந்திருப்பது இந்தகோவிலின் தனிச்சிறப்பு. பொதுவாக சங்கரநாராயணர் கோவிலில் முன்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கூட சிவலிங்கத்தின் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் தீபங்களை காண முடியும்.
ஆனால்,வருடத்தில் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதத்தில் வரும் இந்த மூன்று நாட்கள் மட்டுமே சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேனியின் மீது விழும் அழகினை ரசிக்க முடியும். சில வருடங்களில் இது 4 நாட்கள் கூட நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்று நேரடியாக சூரிய கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுவது வெகு சில கோவில்களை மட்டுமே நடைபெறும் அதில் ஒன்றுதான் சங்கரன் கோவிலில் அமைந்திருக்கும் சங்கரநாராயணன் திருக்கோவில்.
வருடத்தில் வரும் பிரத்யேகமான இந்த ஆறு நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மீது விழும் அளவிற்கு தொழில்நுட்பத்தோடு கோயிலை அமைத்தார் மன்னர் உக்கிர பாண்டியன். நீங்களும் அடுத்த முறை இந்த ஆறு நாட்களில் தவறாமல் சங்கரன்கோவிலில் இருக்கும் சங்கரநாராயணன் கோவிலுக்கு சென்று இந்த அதிசயத்தை கண்டு ரசித்து வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tenkasi