முகப்பு /தென்காசி /

"அச்சு தொழிலில் 18% ஆக உள்ள வரியை குறைக்க வேண்டும்" - தென்காசி அச்சக உரிமையாளர்களின் பட்ஜெட் கோரிக்கைகள்

"அச்சு தொழிலில் 18% ஆக உள்ள வரியை குறைக்க வேண்டும்" - தென்காசி அச்சக உரிமையாளர்களின் பட்ஜெட் கோரிக்கைகள்

X
மாதிரி

மாதிரி படம்

Tenkasi News | அச்சு தொழில் நலிவடையாமல் காத்திட காகிதம் மற்றும் மை ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் அச்சு தொழில் செய்து வரும் மாரிச்சாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

அச்சு தொழில் நலிவடையாமல் காத்திட காகிதம் மற்றும் மை ஆகியவற்றிற்கு விதிக்கப்படும் வரியை குறைக்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் அச்சு தொழில் செய்து வரும் மாரிச்சாமி தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் நிலவும். அதன்படி, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அச்சு தொழில் செய்து வருபவர்களும் வரி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Tenkasi, TN Budget 2023